AD

ஜே .கே.ரித்தீஷ் மனைவி மீது விசாரணை..!!!

ஜே .கே.ரித்தீஷ் கடந்த மாதம், தேர்தல் பிரச்சாரத்தின் போது ராமதபுரத்தில் திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவர் பிரபல நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். ரித்திஷின் இறப்பு திரையுலகினரை  மற்றும் அல்லாது அரசியல் தலைவர்கள் மத்தியிலும்  மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவருடைய மனைவி ஜோதி, ஆபாசமாக பேசி, அடியாட்களை கொண்டு மிரட்டல் விடுவதாகவும் அவருடைய வீட்டில் வேலை செய்த கேசவன் என்பவர், சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இந்த புகாரில் கேசவன் குறிப்பிட்டுள்ளதாவது.... "கடந்த 10 ஆண்டுகளாக ஜே .கே .ரித்தீஷிடம்  நான்  பணியாற்றி வருவதாகவும் இதனால் அவருக்கு சொந்தமான வீட்டில் தன்னையும் தன்னுடைய குடும்பத்தினரையும் தங்கி கொள்ளுமாறு கொடுத்து விட்டார் எனவும், அவரிடம் பணி செய்ததற்கான ரூ.4 லட்சம் பணத்தை நான் பெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது அவருடைய மனைவி ஜோதி, தனக்கு வர வேண்டிய தொகை ரூ.4 லட்சத்தை கொடுக்காமல், வீட்டை காலி செய்ய வேண்டும் என, அடியாட்களுடன் வந்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார். அதே போல் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேசும் ஜோதியிடம் வீட்டை கொடுத்துவிட்டு ஓடிவிடு என, தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்ததாகவும் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

கேசவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஜே .கே.ரித்தீஷ் மனைவி ஜோதியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#Rithesh #Jothy #TamilCinemaKing