முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஐஸ்வர்யா ராய்..!!!
பொன்னியின் செல்வன் என்ற சரித்திர நாவலை எப்படியாவது படமாக்கியே ஆவது என்ற முடிவுக்கு வந்து, அதற்கான தீவிரத்தில் இருப்பவர் இயக்குநர் மணிரத்னம்.
இருபாகங்களாக, அந்தப்படத்தை எடுக்க வேண்டும் என அவர் தீர்மானித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
முதல் பாகத்தில் களம் இறங்கியிருக்கும் அவர், படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகையரை தேர்வு செய்து வருகிறார். இந்தப் படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாபச்சன், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி சம்மதம் பெற்று விட்டதாக தகவல் பரவி இருக்கிறது.
இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய், இது குறித்து அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருப்பதாவது,
பொன்னியின் செல்வன் என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாவலை இயக்குநர் மணிரத்னம் இயக்குகிறார். அதில், ஒரு முக்கியமான கேரக்டரில் நடிப்பதற்காக, என்னை அணுகினர். கதையும், கேரக்டரும் எனக்கு ரொம்பவும் பிடித்துப் போனதோடு, படத்தை மணிரத்னம் இயக்குகிறார் என்பதால், மறுப்பேதும் சொல்லாமல், நடிக்க ஒப்புக்கொண்டேன்-என்றார்.
#Aishwarya_Rai #tamilcinemaking #Keerthy_Suresh #Amitabh_Bachchan
Post a Comment