AD

தர்பார் படபிடிப்பில் மோதல்..!!!

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிக்கும் தர்பார் படத்தின் சூட்டிங், மும்பையில் உள்ள கல்லூரியில் நடைபெற்று வருகிறது. சூட்டிங்கை வேடிக்கை பார்க்கும் மாணவர்கள் சிலர், தங்களுடைய மொபைல் போனில் எடுத்த போட்டோக்களை அடிக்கடி இணையதளங்கில் வெளியிட்டும் வந்தனர்.

படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவே அந்த போட்டோக்களை கசிய விடுகிறதா என்ற சந்தேகமும் எழுந்த வந்த நிலையில், படங்கள் லீக்காவதற்கு மாணவர்கள் தான் காரணம் என தெரியவந்தது. இதனால் சூட்டிங்கை வேடிக்கை பார்க்க மாணவர்களுக்கு தடை, அப்படி மாணவர்கள் வந்தாலும் செல் போனுடன் செல்ல தடை விதிக்க பட்டது.இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களுக்கும், படக்குழுவினர்களுக்கும் இடையில், மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. படப்பிடிப்பை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆத்திரமடைந்த மாணவர்கள், கல்லூரியின் மாடிக்கு சென்று சூட்டிங் நடைபெற்ற வந்த இடத்தை நோக்கி கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது.
இவ்விவகாரத்தால், சூட்டிங் இடத்தை வேறு இடத்திற்கு மாற்றும் ஆலோசனையில் இயக்குனர் முருகதாஸ் இருக்கிறாராம். படக்குழு, இந்த கல்லூரியிலேயே 3 மாதங்கள் சூட்டிங் நடத்த திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

#Darbar #Photoissue  #Shooting  #Rajinikanth #ArMurugadoss #Nayanthara #Tamilcinemaking