AD

அரண்மனை பாகம் 3 தயாரிக்க இருக்கும் இயக்குநர் சுந்தர் சி.

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த காஞ்சனா 3-யைப் பொறுத்தவரை இதற்கு முந்தைய பாகங்களை விட, இதில் விறுவிறுப்பு குறைவுதான், புதிதாக ஒன்றுமில்லை என்பது தான் பலரின் கருத்தாக இருக்கின்றது. இதன் அடுத்த பாகம் வேறு வர இருக்கின்றது.
இதற்கிடையே மற்றுமொரு ஹாரர் படமான அரண்மனை படத்தில் 2 பாகங்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டது. தற்போது இதன் 3-ம் பாகத்தையும் இயக்க திட்டமிட்டிருக்கிறாராம் இயக்குநர் சுந்தர் சி. தற்போது விஷாலை வைத்து பெயரிடப் படாத படம் ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கும் அவர், இதனை முடித்து விட்டு, அரண்மனை 3-யின் வேலைகளை துவங்க இருக்கிறாராம்.

காஞ்சனா 3-யை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#sundar.c #trisha #hansikamotwani #kushboo #tamilcinemaking #aranmanaipart3