AD

படு கவர்ச்சி உடையில் ரித்திகா சிங் - கடுப்பான நெட்டிசன்கள்..!!!

நடிகை ரித்திகா சிங்  முதல் படமான "இறுதி சுற்று" படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது, பிலிம் ஃபேர் விருது, உட்பட பல விருதுகளை பெற்றார். மேலும் சிறந்த ரீ-என்ட்ரிக்காக காத்திருந்த நடிகர் மாதவனுக்கும் இப்படம் மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து, ரித்திகா சிங் விளையாட்டில் மட்டும்  இன்றி திரைப்படங்கள் நடிப்பதிலும் அதிக கவனம் செலுத்த துவங்கினார். அந்த வகையில் இவர் விஜய் சேதுபதியுடன் நடித்த 'ஆண்டவன் கட்டளை' , 'சிவலிங்கா' ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றது. தற்போது இவர் நடித்துள்ள 'வணங்காமுடி' என்கிற ஒரு படம் மட்டுமே தமிழில் இவர் கைவசம் உள்ளது.

நடிப்பில் தீவிர கவனம் செலுத்திவரும் இவர், பட வாய்ப்பை பிடிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். ஏற்கனவே பல்வேறு கவர்ச்சி உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வந்த ரித்திகா, தற்போது ஓவர் கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார். இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில் படு கவர்ச்சி உடையில் இருப்பதை கண்டு நெட்டிசன்கள் சிலர் விமர்சிக்க துவங்கியுள்ளனர். 



#boxing #tamilcinemaking #kollywood #rithikasingh #tamilcinemalatestnews #madhavan #nationalaward