AD

நயன்தாராவின் திடீர் முடிவு... !!!

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது எல்லோரும் அறிந்த விஷயம்.திருமணம் எப்போது என்று தெரியாமலே நயன்தாராவுடன் காதல் வானில் பறந்துகொண்டிருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன், நயனை நினைத்து உருகி உருகி காதல் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்.விக்னேஷ் பொறுமையாக இருந்தாலும் அவரது குடும்பத்தினர் பொறுமை கடந்து விட்டனர். திருமணம் எப்போது என்று முடிவு செய்ய வேண்டும் என நயனிடம் கண்டிஷன் போட ஆரம்பித்தனர்.
இதில் ஷாக் ஆனா நயன் பதில் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்துள்ளார். இதனால் விக்னேஷ்-நயன் காதலில் விரிசல் விடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியது. ஆனால் நயன்தாரா தற்போது மனம் மாறியிருக்கிறாராம். இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயதார்த்தத்துக்கு நயன் சம்மதம் தெரிவித்திருக்கிறார். திருமணம் பற்றி பின்னர்தான் சொல்வாராம்.
நயனின் புதிய முடிவால் விக்னேஷ் சிவனும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். ஒவ்வொரு படத்துக்கும் ஒன்றரை முதல் 2 கோடி வரை சம்பளம் வாங்குவதுடன், ரஜினியுடன் "தர்பார்", சிரஞ்சீவியுடன் "சேரா" என அடுத்தடுத்து டாப் ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. காதலனுடன் நிச்சயதார்த்தத்துக்கு பிறகு நயனின் மார்க்கெட் என்னவாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

#VigneshShivan #Nayanthara #Tamilcinemaking #Marriage #Issue #Tamilcinemaking