AD

சிம்புவுடன் நடிக்க தயங்கும் பிரபல நடிகை...!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கவிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படம் குறித்து நிறைய தகவல்கள், குறிப்பாக அப்படத்தில் பங்கு பெரும் நட்சத்திரங்கள் குறித்து வந்து கொண்டே இருக்கின்றன. மணிரத்னம் தரப்பில் ஒரு பிட்டுச் செய்தி கூட அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில்  அமிதாப் பச்சன் தொடங்கி சிம்பு வரை சுமார் 20 நட்சத்திரங்கள் உள்ளே வருவதும் போவதுமாக இருந்தனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஓரளவு பேசி முடிக்கப்பட்ட ஒரு உத்தேச நட்சத்திரப் பட்டியலுடன் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ தொடங்க இருந்த நிலையில் நடிகை நயன்தாரா, மணிரத்தினத்திடம் நடிகர் சிம்பு இந்த படத்தில் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லியுள்ளார். இதனை அடுத்து நடிகர்கள் விக்ரமும், ஜெயம்ரவியும் இதே கருத்தை கூறியுள்ளார்கள்.இதனால் ஒரு முடிவுக்கு வந்த மணிரத்தினமும் நேராக சிம்புவை அழைத்து கூறியுள்ளார். பெருந்தன்மையாக சிம்பு இந்த படத்தை விட்டு விலகி கொள்வதாக கூறியுள்ளார்.
அதன் பிறகு பட்ஜெட்டை லைகா நிறுவனத்துக்கு அனுப்பி வைத்ததாகவும் அந்த பட்ஜெட் "பாகுபலி 2"   பட்ஜெட்டை விட அதிகமாக இருந்ததைக் கண்டு லைகா நிறுவனம் சற்றே ஸ்தம்பித்து விட்டதாகவும் தகவல். ஏற்கனவே "இம்சை அரசன் 24" டிராப், "சபாஷ் நாயுடு"டிராப், ‘இந்தியன் 2’ ஏறத்தாழ டிராப் என்ற நிலையில் தவிக்கும் லைகா நிறுவனம் ‘இது எங்களுக்கு கட்டுபடியாகாது சாமி’ என்று கையைத் தூக்கிவிட, மும்பையிலுள்ள ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் கேட்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#ponniyinselvan #subaskaran #manirathnam #simbu #nayanthara #vikram #jeyamravi #tamilcinemaking #lyca