தன் முடியை தானே வெட்டி விமர்சனத்திற்குள்ளான நடிகை
ராகவா லாரன்ஸ் அக்ஷய் குமாரை வைத்து இயக்கும் காஞ்சனா இந்தி ரீமேக்கில் கியாரா நடிக்கிறார். கியாரா அத்வானி அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபிர் சிங் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார்.இந்நிலையில் அவர் சமூக வலைதளங்களில் தற்போது வெளியிட்ட வீடியோ ஒன்றினால் விமர்சனங்களிற்கு உள்ளாகியுள்ளார்.
படப்பிடிப்புகளில் தான் பிசியாக இருப்பதால் அவரது தலைமுடியை பராமரிக்க முடியவில்லை என்று கூறி கியாரா தனது முடியை நறுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் எந்த நடிகையும் உங்களை போன்று இப்படி முடியினை வெட்ட மாட்டார். இது விளம்பரம் தேடுவதற்காக செய்யப்படுவது போல் உள்ளது. அல்லது புதுப்படத்திற்காக முடியை நறுக்கியிருப்பீர்கள். உங்கள் நடிப்பு நன்றாக உள்ளது என கிண்டல் செய்துள்ளனர். மற்றும் அவருக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும் இல்லை என்றால் நடிக்கிறார் என்றும் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி கியாரா அத்வானி கூறும் போது எனக்கு தலைமுடி நீளமாக வளர்க்க பிடிக்கும். ஆனால் வேலையின் காரணமாக பராமரிக்க முடியவில்லை. அதனால் தான் நானே கத்தரிக்கோலை எடுத்து முடியை வெட்டிவிட்டேன் என்று கியாரா தெரிவித்துள்ளார். ஆனால் அவரது பேச்சை யாரும் நம்புவதாக இல்லை.
#KiaraAdvani #TamilcinemakingGuilty as charged!!! Just had to chop it off, been neglecting proper hair care for too long and thought this was the only solution✂️ 🙈 pic.twitter.com/tYygorE9Ke— Kiara Advani (@Advani_Kiara) April 30, 2019
Post a Comment