AD

தனி ஒருவன் 2

தரமான படமாகவும், வசூலைத் தந்த படமாகவும் அமைந்த ஒரு படம்தான்  'தனி ஒருவன்'. படத்தின் இரண்டாம் பாகம் வரும் என ஏற்கெனவே இயக்குநர் மோகன்ராஜா தெரிவித்திருந்தார். 

இப்போது 2 ஆம் பாக படத்திற்கான கதை வேலைகளில் அவர் இருப்பதைப் பற்றி நேற்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

“தனி ஒருவன் அடுத்த பாகத்தின் கதை வேலைகளில் இருக்கும் போது, என் உதவி இயக்குநர்களிடம், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிடலாமா எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் 200 சதம் சார் என்றார்கள். 

அப்போது போன் அடித்தது. இயக்குநர் ராம் பேசினார். “ராஜா மறுபடி தனி ஒருவன் பார்த்துட்டிருக்கேன். மிகப் பெரிய உழைப்பு, எப்படி இப்படி. அடுத்த பாகம் கேர்புல்லா பண்ணுங்க, ஆர்வம் நிச்சயம் வெல்லும், என்றார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


#Jayam_Ravi  #Nayanthar,  #Arvind  #Swamy #tamilcinemaking