AD

அடுத்த படத்திற்கு தயாராகும் மணிரத்னம்!


நடிகை கீர்த்தி சுரேஷ் 2018-ல் நடிகையர் திலகம், சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2 மற்றும் சர்கார் என அடுத்தடுத்து பல படங்களில் நடித்திருந்தார். அனைத்து படங்களும் பெரியளவில் ஹிட் என்றே சொல்லலாம். 2018-ல் அமைந்த அளவில் அவருக்கு 2019-ல் படங்கள் அமைந்ததா என்று கேட்டால். இல்லை என்பதே பதிலாகும். அந்த வகையில், நடிகை கீர்த்தி சுரேஷிற்கு தற்போது பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம், அடுத்து மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் கதை போனின் செல்வன் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாம். மேலும் படத்தை லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் செக்க சிவந்த வானம் படம் போல பல நடிகர் நடிகைகள் நடிக்கவிருக்கிறார்களாம். தற்போதைக்கு, அமிதாப் பச்சன், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி என இந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்கள்.

படத்தில் கீர்த்தி சுரேஷ் யாருக்கு ஜோடி என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. மேலும் கீர்த்தி சுரேஷ் தற்போது அவரது 29-வது தெலுங்கு படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து, பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் வாய்ப்பு குறைவாக இருந்தாலும் தெலுங்கு, ஹிந்தி என பிசியாக தான் இருக்கிறார்.