AD

நீலிமாவின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்..!!!

சின்னத்திரை மற்றும் பெரிய திரை நடிகை நீலிமா ராணி ராதிகாவின் ஆஸ்தான நாயகி என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ராதிகாவுடன் எல்லா சீரியலிலும் நடித்திருப்பவர்தான் இந்த நீலிமா ராணி. நடித்து கொண்டிருந்தவர் ஜீ டிவியில் நிறம் மாறாத பூக்கள் என்ற நாடகத்தை தயாரித்து இருந்தார்.
தற்பொழுது மீண்டும் ஒரு தொடர் எடுக்க உள்ளார். அந்த தொடரின் பெயர் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" இதில் விஷ்ணு ஹீரோவாகவும், கிருஷ்ணப்ரியா ஹீரோயின் ஆகவும் நடிக்கிறார்கள். காதல், திருமணம், குடும்பம் என்னும் வழக்கமான கதையுடனும், சாபம், விதி, நம்ப முடியாத மூடநம்பிக்கை உடனும் பயணிக்க இருக்கிறது இந்த தொடர். இந்த தொடரும் ஜீ டீவியிலேயே பயணிக்க போகின்றது அதுவும்  திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 ஒளிபரப்பாக போகின்றது.

#kandukondain kandukondain #neelima rani #Zeetamil #Drama #Tamilcinemaking