AD

சின்னத்திரை பிரபலங்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள்.!!

இது ஒரு காதல் கதை தொடரின் மூலம் அறிமுகம் ஆனவர் தான் நடிகர் பிரஜின். அதன் பிறகு இவர் வரிசையாக பெண், அஞ்சலி, கோகுலத்தில் சீதை, காதலிக்க நேரமில்லை, ஆகிய தொடரில் நடித்திருந்தார். வெள்ளி திரையிலும் ஒரு சில படங்களில் நடித்திருந்தார்.

மலையாள சினிமாவிலும், தமிழில் சின்னத்திரையிலும் ஒரே நேரத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை சாண்ட்ரா. இவர் மகன், தலையணிப்பூக்கள் , ரோஜாக்கூட்டம், தங்கம் என பல தொடர்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் "சிவப்பு எனக்கு பிடிக்கும்" உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்பொழுது அக்கா, அண்ணி, கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பிரஜின், சாண்ட்ரா இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று பிரஜின் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் "இந்த காதலர் தினம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் நான் அப்பாவாகவும், என் மனைவி அம்மாவாகவும்" ஆக போகிறோம். எங்களின் இந்த திருமண பயணம் தொடங்கி 11 ஆண்டுகள் ஆகின்றன. இதில் "தோழியாக", "மனைவியாக", "தாயாக", என் "மனைவியாக" இருக்கிறார். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் எனக்கு அது அதிகமாகவே இருக்கிறது என்று பதிவிட்டிருந்தார்.
தற்பொழுது பிரஜின், சாண்ட்ரா தம்பதிகளுக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. தாயும் மகளும் மிகவும் நலமாக உள்ளனர். சமூக வலைதலங்களில் இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டு இருக்கின்றது.

#Prajin #Sandra Amy #twins baby #baby girls #Tamilcinemaking