AD

அமலா பாலின் இந்த திடீர் முடிவிற்கு காரணம் என்ன தெரியுமா?


நடிகை அமலா பால் தற்போது மூன்று படங்களை கைவசம் வைத்துள்ளார். மூன்று படங்களுமே பெண்களுக்கு முக்கியதுவம் உள்ள கதாபாத்திரம். ஆடை, அதோ அந்த பறவை போல என தமிழில் இரு படங்களும், ஆடு ஜீவிதம் என ஒரு மலையாள படமும் நடித்து வருகிறார். 21 வயதில் இயக்குனர் எ. எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்த அமலா ஒரே வருடத்தில் மன கசப்பு காரணமாக பிரிந்துவிட்டார்.

பிரிவிற்கு பிறகு தான் வாழ்க்கையை உணர்ந்ததாக கூறி பல நல்ல விஷயங்களை செய்துகொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். படங்களின் தேர்வுகளும் சிறந்ததாகவே இருக்கிறது. இந்த நேரத்தில் நடிகை நடிப்பதோடு இல்லாமல் ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறாராம். ஆம், இவர் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியாக இருக்கும் படம் பெயர் கடாவர்.


கடாவர் என்றால் மனிதனின் உயிரற்ற உடல் என்று அர்த்தமாம், இந்த படத்தில் அமலா மனித நோய்கள் மற்றும் உடல் பற்றிய விஷயங்களை ஆராச்சி செய்தும் திரையை சார்ந்தவராக தான் நடிக்கப்போகிறாராம். இது போன்ற கதாபாத்திரம் இது வரை தமிழ் சினிமாவில் எந்த படத்திலும் வந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. படத்தை தமிழ் மலையாளம் என இரு மொழிகளிலும் எடுக்க திட்டமிட்டுள்ளாராம்.