AD

ஜோதிகாவிற்கு அடித்திருக்கும் லாட்டரி! அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி


தமிழ் சினிமாவில் சினிமா குடும்பம் என்று சொன்னால் அனைவர்க்கும் நினைவில் வருவது சிவகுமார் குடுத்தும் தான். சிவகுமார் போல் அவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தியும் பிசியாக நடித்து வந்தார்கள். சூர்யாவின் மனைவி ஜோதிகா திருமணத்திற்கு பிறகு சிறிய இடைவெளியிற்கு பின்பு மீண்டும் நடிக்க அரமித்துவிட்டார்.

இப்போது அதிக படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தற்போது கல்யாண் இயக்கத்தில் ரேவதி, யோகிபாபு, மன்சூர் அலிக்கான், ஆனந்தராஜ் என இவர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. ஆம், படம் மே 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறதாம்.

இந்த படத்தை தொடர்ந்து ஜோதிகா அறிமுக இயக்குனர் ராஜ் இயக்கும் படத்தில் பள்ளி ஆசிரியையாக நடித்து வருகிறார். மேலும், பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன் என இவர்களுடன் இணைந்து ஒரு படத்திலும் நடிக்கிறார். அதைத்தொடர்ந்து, ஜீத்து ஜோசெப் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து ஒரு படத்திலும் நடிக்கிறார். எனவே இவர் நடிப்பில் இந்த ஆண்டு அடுத்தடுத்து 4 படங்கள் வெளியாக போகிறது.