AD

இயக்குனர் மகேந்திரன் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்!


திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல் நலக் குறைவால் காலமானார். பழம்பெரும் திரைப்பட இயக்குனர் சி. மகேந்திரன் இன்று காலை சென்னயில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காததால் காலமானார். அவருக்கு வயது 79. தமிழ்த் திரையுலகில் தனக்கென முத்திரை பதித்தவர் இயக்குநர் மகேந்திரன். ரஜினியின் திரைப்பட வரலாற்றில் மைல் கல்லாக விளங்கிய முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் மகேந்திரன்.

எவ்வித ஆரவாரமும் இன்றி எடுக்கப்பட்ட இவரது படங்கள் பெரும்பாலும் ஆகச்சிறந்த திரைப்படங்களாகவே இருந்தன. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பிறந்த மகேந்திரன், எம்.ஜி.ஆரின் அழைப்பின் பேரில் சென்னைக்கு வந்து திரைத்துறையில் பணியாற்றினார். 12 படங்களை இயக்கிய சி. மகேந்திரன் தங்கப்பதக்கம், காளி, ஹிட்லர் உமாநாத் என தமிழ், தெலுங்கில் 26 படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.

தெறி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மகேந்திரன்,தேரி, பேட்ட, நிமிர், பூமராங் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். உடல் நலக் குறைவால் கடந்த வாரம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேந்திரன் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த, ரஜினி, கமல், பாக்யராஜ், வைரமுத்து, பாரதிராஜா, சசிகுமார், ராதிகா, வரலக்ஷ்மி சரத்குமார், கார்த்திக் சுப்புராஜ், கருணாகரன், இளையராஜா, பாலா, சங்கர் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.














இயக்குனர் மகேந்திரன் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்
வீடியோ வடிவில் காண!!
#RIPMahendran #Mahendran #LegendaryDirector #Rajinikanth