நடிகை மீது அவரின் தாயே போலீசில் புகார்..!!!!
நடிகை சங்கீதா இவர் முன்பு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்தவர். அதன் பிறகு பின்னணி பாடகர் கிரிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது. தற்பொழுது சங்கீதாவின் அம்மா பானுமதி போலீசில் ஒரு புகார் ஒன்று கொடுத்துள்ளார். அந்த புகார் குறித்து கூறிய போலீசார் ‘எம்.ஜி.ஆரை வைத்து பத்து படங்களுக்கும் மேல் தயாரித்த கே.ஆர்.பாலனின் மகள் தான் பானுமதி. இவர் சென்னை வளசரவாக்கத்தில் இப்போது குடியிருக்கின்ற வீடு தன் மாமனார் வீட்டு வழியில் வந்த சொத்து. அந்த வீட்டில் இப்போது பானுமதி தரை தளத்திலும் சங்கீதாவும் அவரது கணவரும் மாடியிலும் குடியிருக்கிறார்கள்.
அந்த வீடு இப்போது சங்கீதா பெயரில் இருக்கிறது. அந்த வீட்டை அண்ணன், தம்பி அபகரித்து விடுவார்களோ அல்லது அதற்கு தன் அம்மாவும் துணை போய்விடுவார் என்று பயப்படுகிறார். பானுமதிக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. சமீபத்தில் தான் அவரது ஒரு மகன் இறந்தார். இந்த சூழலில் வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னால் அவர் எங்கேபோவார்? அதனால்தான் மகளிர் ஆணையத்தில் புகார் தந்திருக்கிறார்’என்று தெரிவித்தனர்.
பானுமதி தரப்பில் புகார் குறித்து கேட்டதற்கு புகாரில் எல்லாவற்றையும் சொல்லிவிட்டோம். நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்படி நல்லது நடக்கவில்லை என்றால் அந்த சமயத்தில் விரிவாக பேசுகிறேன் என்றார்.
இது குறித்து நடிகை சங்கீதாவிடம் கேட்டதற்கு ‘சினிமா தொடர்பான விஷயம் என்றால் பேசலாம். இது என் தனிப்பட்ட விஷயம். இதைப்பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை’ என்றார்.
#sangeetha #krish #motherissue #tamilcinemaking
அந்த வீடு இப்போது சங்கீதா பெயரில் இருக்கிறது. அந்த வீட்டை அண்ணன், தம்பி அபகரித்து விடுவார்களோ அல்லது அதற்கு தன் அம்மாவும் துணை போய்விடுவார் என்று பயப்படுகிறார். பானுமதிக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. சமீபத்தில் தான் அவரது ஒரு மகன் இறந்தார். இந்த சூழலில் வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னால் அவர் எங்கேபோவார்? அதனால்தான் மகளிர் ஆணையத்தில் புகார் தந்திருக்கிறார்’என்று தெரிவித்தனர்.
பானுமதி தரப்பில் புகார் குறித்து கேட்டதற்கு புகாரில் எல்லாவற்றையும் சொல்லிவிட்டோம். நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்படி நல்லது நடக்கவில்லை என்றால் அந்த சமயத்தில் விரிவாக பேசுகிறேன் என்றார்.
இது குறித்து நடிகை சங்கீதாவிடம் கேட்டதற்கு ‘சினிமா தொடர்பான விஷயம் என்றால் பேசலாம். இது என் தனிப்பட்ட விஷயம். இதைப்பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை’ என்றார்.
#sangeetha #krish #motherissue #tamilcinemaking
Post a Comment