AD

நிர்வாணமாக பெண்ணை நிற்க வைத்த பயிற்சியாளர்.


வினய் வர்மா கடந்த 20 ஆண்டுகளாக ஹைதராபாத்தில் சூத்ரதார் நடிப்பு பயிற்சி மையத்தை நடத்தி வருகின்றார். அவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் 21 வயது கல்லூரி மாணவி ஒருவர் வினய் வர்மா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது.

'கடந்த 15ம் தேதி நான் வினய் வர்மாவின் நடிப்பு வகுப்புகளில் சேர்ந்தேன்.
வகுப்பில் 7 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் இருக்கிறோம்.. வகுப்பின் கதவுகள், ஜன்னல்களை மூடிவிட்டு வினய் வர்மா எங்களை ஆடைகளை அவிழ்த்து விட்டு நிர்வாணமாக நிற்குமாறு கூறினார் என்கிறார் அந்த மாணவி.

வினய் வர்மா கூறியதை அடுத்து 7 மாணவர்கள் ஆடையை அவிழ்த்தனர். அதை பார்த்த வினய் உள்ளாடையையும் கழற்றுமாறு கூறினார். ஆடையை அவிழ்க்காவிட்டால் வகுப்பில் இருந்து வெளியேறுமாறு வினய் தெரிவித்தார் என்று அந்த மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை பற்றி வினய் வர்மா தெரிவித்த போது, நிர்வாணமாக நடிப்பது நடிப்பு பயிற்சியில் ஒரு பகுதி. மாணவ, மாணவிகளால் அப்படி நடிக்க முடியுமா என்பதை கண்டறியவே இப்படி ஒரு பயிற்சி. நிர்வாணமாக நடிக்க முடியாதவர்களை வெளியே நிற்க வைப்போம். வகுப்புகளில் சேரும்போதே அவர்களிடம் இப்படி ஒரு விஷயம் இருப்பதை கூறவில்லை என்றார்.

வினய் வர்மாவுக்கு எதிராக அந்த 21 வயது பெண்ணின் குடும்பத்தார் காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து வினய் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.

#