AD

'நான் சிங்கிள் மாம்' - தொகுப்பாளினி மகேஸ்வரி...!!!

மகேஸ்வரி, தீபக் இருவரும் ஜி தமிழ்' சேனலில் 'பேட்டராப்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள். இருவருமே பல வருட தொகுப்பாளர்களாக உள்ளார்கள். மகேஸ்வரி ஒரு சில நாடகங்களிலும் நடித்துள்ளார். தற்போது தன் மகன் மற்றும் தன் தாயுடன் வசித்து வருகிறார். மகேஸ்வரி தற்பொழுது ஒரு சமூக வலைத்தளத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியது:-

''இந்தச் சமுதாயத்துல நமக்குப் பிடிச்ச மாதிரியான வாழ்க்கையை அமைச்சுக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு. எனக்கு மீடியா மீது ஆர்வம் இருந்ததால, ஆங்கரின், சீரியல் வேலையைப் பார்த்துட்டு இருக்கேன். ஆனால், ஆரம்பத்தில், 'மீடியாவுல இருக்கிற பொண்ணை யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க'னு என் காதுபடவே பேசியிருக்காங்க.
என்னதான் அதை நான் கண்டுக்காம இருந்தாலும், என் அம்மா, அப்பாவுக்கு கஷ்டமா இருந்தது, அந்தப் பயத்தினாலேயே மீடியாவுக்குள்ள வந்த கொஞ்ச நாள்லயே கல்யாணம் பண்ணி கொடுத்திட்டாங்க,  இருவருக்கும் மனப் பொருத்தம் இல்லை. சில வருடங்களிலேயே பிரிஞ்சுட்டோம். என் பையனை வளர்க்கிற பொறுப்பை நானே ஏற்று கொண்டேன்.
'நான் சிங்கிள் மாம்'னு ஒரு நிகழ்ச்சியில் மேடையில் பேசும்போது சொன்னேன். மேடையிலிருந்து கீழே இறங்கி வந்ததும் ஒரு பெண், 'என்ன நீங்க சிங்கிள் மாம்'னு மேடையில பேசுறீங்க. அப்படி உங்க அடையாளத்தை வெளிப்படுத்துறது தப்புனு தோணலயா?'னு கேட்டாங்க. 'இதுல என்னங்க தப்பு. நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே சொல்றேன். என்னைப் பெருமைப்பட பேச வேண்டாம். அதே நேரம், இறக்கியும் பேச வேண்டாம். நீங்களே எங்களைப் போன்றவர்களுக்கு சப்போர்ட் செய்யலைனா எப்படி என்று கேட்டுட்டு  நடந்து வந்துட்டேன்.
ஒரு பொண்ணு இந்தச் சமூகத்தில் தனியா வாழ்றது எவ்வளவு கஷ்டம் என்பது என்னைப் போன்ற பெண்களுக்குத்தான் தெரியும். அதேபோல உடல்பருமன், வயது இவற்றையெல்லாம் பேசிப் பேசி ஏன் புண்படுத்துறீங்கன்னு தெரியல. நாங்களும் ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள். எங்களுக்குள்ளும் மனசு இருக்கு. அதை மத்தவங்க புரிஞ்சுக்கணும். பெண்களுக்குள் இருக்கும் பிரச்னைகள் ஆயிரமாயிரம். அவற்றைத்தாண்டித்தான் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ஓடுகிறோம்'' என்கின்றார் மகேஸ்வரி.

#maheshwari #women #zeetamil #cinema #television #serial #tamilcinemaking