AD

டிஸ்ரப் செய்யாமல் காத்து நின்ற விஜய் - கத்ரினா கைப்


விஜய் எப்போதும் அமைதியாகவும், அதிகம் யாருடனும் பேசாமலும் இருப்பார். 

இந்நிலையில் விஜய்யுடன் கோகோ கோலா விளம்பரத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகை கத்ரினா கைப் தற்போது விஜய் பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார். 

அதில் ஊட்டியில் கோகோ கோலா ஷூட்டிங் நடைபெற்றது. அப்போது நாங்கள் அனைவரும் தரையில் தான் அமர்ந்திருந்தோம். நான் கீழே என் போனை பார்த்துக்கொண்டிருந்தேன்.அப்போது என் முன் இரண்டு கால்கள் வந்து நின்றது. யாரோ நிற்கிறார்கள் என நான் மேலே பார்க்காமல கீழே போனையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

"நீண்ட நேரம் ஆகியும் அந்த கால்கள் அங்கேயே இருந்தது. யாராக இருக்கு என நான் மேலே தலையை தூக்கி பார்த்தபோது அது விஜய் என தெரிந்தது. ஒரு சூப்பர்ஸ்டார் எனக்கு குட்பை சொல்வதற்காக இப்படி காத்துக் கொண்டிருந்திருக்கிறார். நான் போனில் எதோ செய்துகொண்டிருப்பதை பார்த்து என்னை தொந்தரவு செய்ய விரும்பாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தார். என்று கூறினார்.

#Thalapathy #Vijay #Katrinakaif #Cocacolaadvert #Tamilcinemaking