AD

பிக் பாஸ்சிற்கு பிறகும் ஓவியா இப்படி நடந்துகொள்ள காரணம் என்ன?


பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஓவியா. இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ்சிற்கு முன்பு எப்படிப்பட்ட படத்தில் நடித்தாரோ அதே போல் தான் பிக் பாஸ் பின்பும் படங்களை தேர்ந்தெடுத்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட போது தான் மோசமான படங்களில் நடித்ததற்கு எனது தாய்யின் உடல் நிலை தான் காரணம் என்று கூறினார் ஓவியா. ஆனால் தற்போதும் மது அருந்துவது, புகைபிடிப்பது, கவர்ச்சி காட்டுவது போன்றே பல படங்களிலும் நடித்து வருகிறார் ஓவியா. மேலும், தற்போது இன்னும் ஒரு படி கீழ் இறங்கி ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி வருகிறார் நடிகை ஓவியா.

சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார், அதைத்தொடர்ந்து ராஜா பீமா படத்தில் ஆரவிற்காக ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது அலாவுதீனின் அற்புத கேமரா படத்திலும் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட ஒப்புக்கொண்டுள்ளார் ஓவியா. இவ்வாறு ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது மூலம் நிறைய பணத்தை குறிகிய நாட்களில் சம்பாரிக்கலாம் என்றே இவ்வாறு செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது.