AD

சின்ன வீட்டில் நயன்தாராவோடு படப்பிடிப்பு


சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சினிமா இண்டஸ்ட்ரிக்குள் எண்ட்ரி கொடுப்பதை  அறித்த அஜித், விஜய், சூர்யா என முன்னணி  நாயகர்கள் கலக்கத்தில் உள்ளனர். தொலைக்காட்சி விளம்பரங்களில் நிமிடத்துக்கு  நிமிடம்   கலர்ஃபுல் ஆடையில், கவர்ந்திழுக்கும் பெண்களுடன் கலக்கல்   நடனம்  ஆடி ஸ்டார் ஆகிவிட்டார் சரவணா   ஸ்டோர் அருள். அதை விட   இப்போது ஹைலைட்  ஆகி வருகிறது சரவணா ஸ்டோர் அருள் திருநெல்வேலியில் வாங்கியிருக்கும் சின்ன வீடு குறித்த புகைப்படங்கள் தற்போது  வைரலாகி வருகின்றது. முன்பெல்லாம் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடிகைகள்  நடித்து வந்தனர். ஆனால் சமீபகாலமாக  இந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தின் தலைவர் சரவணனே நடிக்கத் தொடங்கினார்.


சரவணனுக்கு ஜோடியாக தமன்னா, ஹன்சிகா, சினேகா என ஃபீல்டில்   இருக்கும் முக்கால்வாசி நடிகைகளுடன் தோன்றி  தமிழகத்தில் உள்ள   மூலை முடுக்கெல்லாம் பிரபலமாகி விட்டார். (நெல்லை பகுதியில்   இவருக்கு ரசிகர் மன்றங்கள் முளைத்து வருவதாக தகவல். இந்நிலையில்   தற்போது அவர் நாயகனாக நடிக்க முடிவெடுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக  அவர் கதை கேட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறாராம். விளம்பரங்களில் பிரம்மாண்டம்  காட்டிய அருள்  அடுத்து  இரட்டை இயக்குநர்களான  ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் தமிழ்  சினிமாவில் ஹீரோவாக  நடிக்க உள்ளார்.


அவருக்கு   பிடிக்கும்   கதையில்   2020-ம் ஆண்டு   நடிக்க   இருப்பதாக கூறப்படுகிறது.   இவர்   சினிமா இண்டஸ்ட்ரிக்குள் எண்ட்ரி கொடுப்பதை   அறித்த   அஜித், விஜய், சூர்யா என முன்னணி நாயகர்கள் கலக்கத்தில்   இருப்பது   தனிக்கதை. சென்னையில் அண்ணாச்சிக்கு பிரம்மாண்டமாய்   பல   துணிக்கடை மாளிகைகள்   இருப்பதை   போல பலகோடி  ரூபாய்   மதிப்பில் சில சொகுசு வீடுகளையும் கட்டியிருக்கிறார் அருள். அதில் தான்  தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணாகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இருவருக்கு திருமணமும்   முடிந்துவிட்டது.


இந்த நிலையில் தனது சொந்த ஊரான திருநெல்வேலி புறநகர் பகுதியில் பிரம்மாண்டமாய் சின்ன  வீடு ஒன்றை கட்டி கிரஹப்பிரவேசம் செய்துள்ளார் அருள். ’லெஜெண்ட் சரவணன்’  எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த மாளிகையில் அத்தனை வசதிகளும் உள்ளன. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்கும் வகையில் மூன்றடுக்கு மாளிகையில் சமையல் அறையே ஆயிரம் கன சதுரடிக்கு மேல் அமைக்கப்பட்டுள்ளது.


உணவருந்தும்   அறையில்   ஒரே நேரத்தில் ஐம்பதுக்கும் மேலானவர்கள் சாப்பிடும் வகையில் பிரம்மாண்ட டேபிள் விலை உயர்ந்த சேர்கள் போடப்பட்டுள்ளன. இந்த   வீட்டை  பார்த்து உள்ளூர்வாசிகள் வாயடைத்துப்போய் கிடக்கிறார்கள். சென்னையில் வசிக்கும் அருள், எப்போதாவது தனது சொந்த ஊரான நெல்லைக்கு சென்றால் இங்கு ஓரிரு நாட்கள்  தங்கி ஓய்வெடுக்க   இந்த ‘சின்ன வீட்டை’ பிரம்மாண்டமாய் கட்டியுள்ளார். அருள் அண்ணாச்சி  நடிக்க  உள்ள படத்தின் படப்பிடிப்பு  நெல்லை பகுதில் நடைபெற இருப்பதாக தகவல். ஆகையால் அவரது இந்த புதிய வீட்டில் ஷூட்டிங் நடத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

#saravanastoresannachi #saravanastoresannachiwithnayanthara #saravananarulwithnayanthara #saravananarulnewflim #saravananannachinewmovie #movieupdatesofsaravananannachi #saravananannachimovieupdate #saravananannachinewmovie