AD

நடிகை ஆண்ட்ரியா ஆவேசம்..!!

நடிகை ஆண்ட்ரியா போலீஸ் அதிகாரி உட்பட இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ள கன்னட படம்தான் "மாளிகை". மும்பையை சேர்ந்த "கமல் போரோ, ராஜேஷ்குமார்" இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தை கன்னட இயக்குனர் "தில் சத்யா" எழுதி இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் மொழியிலும் விரைவில் வெளிவர இருக்கின்றது. தற்பொழுது இந்த படத்தின் டீசர் வெளியீடு நடந்துள்ளது. அதில் நடிகை ஆண்ட்ரியா கலந்து கொண்டுள்ளார்.
அப்பொழுது அவரிடம் ஒரு நிருபர் பேட்டிக்கு அணுகிய பொழுது "உங்களுக்கு பேட்டி கொடுத்தால்!! "நான் சிகரெட்" பிடிப்பது பற்றியும் "தண்ணி அடிப்பது" பற்றியும் தான் கேள்விகள் கேற்கிறீர்கள், அது மற்றும் இல்லாமல் என்னை பற்றி செய்தி போடும் பொழுது நான் தண்ணி அடிப்பது பற்றியும் எழுதுகிறீர்கள்  அதனால் பேட்டி கொடுக்க மாட்டேன் என்றார் கோபமாக.

அதோடு என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிட நீங்கள் யார் என்றும் பேசியதாகவும் தகவல். ஆனால் இதே ஆண்ட்ரியா தான் அவர் "தண்ணி அடிப்பதையும்" "சிகரெட்" பிடிப்பதையும் தன்னுடைய சமூக வலைதளைங்களில் பதிவுடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


#Andrea Jeremiah #Tamilcinemaking #latestnews