AD

குடும்பத்தோடு சென்று ஓட்டு போட்ட சூர்யா


ஒரு இந்தியனாக அனைவர்க்கும் வாக்கு செலுத்த வேண்டிய கடமை இருக்கிறது.  இது நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம் பாகம் ஆகும். இன்று தமிழகத்தை சேர்ந்த அனைவரும் அவர்களது ஓட்டுகளை அவரவர் வாக்கு சாவடியில் பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில், பல நடிகர்களும் அவர்களது வாக்கை பதிவு செய்து வருகிறார்கள்.


அதிலும் சூர்யா அவரது குடும்பத்தினர், கார்த்தி, ஜோதிகா, ரஞ்சனி என அனைவரும் தியாகராஜ நகர் பகுதியில் உள்ள வாக்கு சாவடி சென்று அவர்களது ஓட்டை செலுத்தியுள்ளார். நடிகர், நடிகைகளை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் அங்கு கூடி வரவேர்த்திருக்கிறார்கள். மேலும், அங்கு மக்களுடன் மக்களாக வரிசையில் நின்றுசூர்யா குடும்பம் அவர்களது  ஓட்டை பதிவு செய்துள்ளார்கள். பத்திரிகையாளர்களும் அனைத்து பிரபலங்களையும் புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.