AD

வேர்வை சிந்தி வாக்களித்த தளபதி விஜய்


ஒரு இந்தியனாக அனைவர்க்கும் வாக்கு செலுத்தவேண்டிய கடமை இருக்கிறது.  இது நாடாளுமன்ற இரண்டாம் பாகம் ஆகும். இன்று தமிழகத்தை சேர்ந்த அனைவரும் அவர்களது ஓட்டுகளை அவரவர் வாக்கு சாவடியில் பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில், பல நடிகர்களும் அவர்களது வாக்கை பதிவு செய்து வருகிறார்கள்.


அதிலும் விஜய், சின்ன நீலாங்கரை பகுதியில் உள்ள வாக்கு சாவடி சென்று அவரது ஓட்டை செலுத்தியுள்ளார். தளபதி விஜயை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் அங்கு கூடி தளபதியை வரவேர்த்திருக்கிறார்கள். மேலும், அங்கு மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று விஜய் அவரது ஓட்டை பதிவு செய்துள்ளார். பத்திரிகையாளர்களும் அனைத்து பிரபலங்களையும் புகைப்படம் எடுத்து வருகிறார்கள். ஆனால் விஜய் மனைவி சங்கீதா விஜயுடன் ஓட்டு போட வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.