AD

தாயாருக்கு பதிலடி கொடுத்த நடிகை.!!

நடிகை சங்கீதா வீடு தொடர்பான சர்ச்சைக்கு  தனது அம்மாவுக்கு வேதனையுடன் கூடிய கடிதம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.  இந்த சர்ச்சைத் தொடர்பாக சங்கீதா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்:-

அன்புள்ள அம்மா! என்னை இந்த உலகுக்குக் கொண்டு வந்ததற்காக நன்றி. எனது பள்ளிப் படிப்பை நிறுத்துவிட்டு 13 வயதிலேயே வேலையில் சேர்த்தாயே.. அதற்கு நன்றி. வெற்றுக் காசோலைகளில் நீ காட்டிய இடமெல்லாம் கையெழுத்து போட வைத்தாய்.. அதற்கு நன்றி.

உனது மகன்களின் மது, போதை வஸ்து சுகத்துக்காக என்னை தவறாகப் பயன்படுத்தினாய். வேலைக்கே சென்றிராத... உழைப்பே தெரியாத.. அதற்கு ஒரு நன்றி. உனது முடிவுகளை நான் புறக்கணித்தபோது என்னை சொந்த வீட்டிக்குள்ளேயே நெருக்கடிக்கு ஆளாக்கிய அதுக்கும்  உனக்கு நன்றி.
நான் உன்னிடம் சண்டை போட்டு பிரியும் வரை எனக்கு திருமணம் செய்து வைக்காமல் இருந்தாய்.. அதற்காக மிகப் பெரிய நன்றி. எனது கணவருக்குத் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து எனது குடும்ப அமைதிக்குப் பாதகம் செய்தாய்.. உன்னால்தான் நான் துணிச்சலான தைரியமான பெண்ணாக இருக்கிறேன். இந்த ஒரு காரணத்திற்காக நான் எப்போதுமே உன்னை நேசிப்பேன்.

ஒரு நாள் உங்கள் மமதையிலிருந்து விடுபட்டு, என்னை நினைத்துப் பெருமை கொள்வாய்..!!!

இவ்வாறு அதில் சங்கீதா தெரிவித்துள்ளார்...!!!

#Sangeetha #Motherissue #Reply #Sangeetha'sExplanation #ForTheControversy #SangeethaReport #Twitter #Tamilcinemaking