AD

போஷிகா விடயத்தில் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்


தாடிபாலாஜியும் நித்யாவும் பிக்பாஸ் 2 இற்கு பிறகு சேர்ந்து வாழ்வார்கள் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும்  இருவருக்கும்  இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் செய்துள்ளதால் போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. 

இந்நிலையில், மகள் போஷிகாவை பார்க்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் பாலாஜி வழக்கு மேற்கொண்டிருந்தார். இதனையடுத்து வாரம் ஒரு முறை பாலாஜி அவரது மகளை பார்க்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பாலாஜி  தெரிவிக்கையில், எனது மகளின் படிப்பு செலவை நானே பார்த்துக் கொள்கிறேன். என் பலமே என் மகள் தான். அவரை வைத்து என்னை வீழ்த்த நித்யா நினைக்கின்றார். நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் எனக்கு நியாயம் கிடைத்துள்ளது. வாரம் ஒரு முறை என் தாய் வீட்டில் மாலை 3:00மணி முதல் 4:00மணி வரை என் மகளை பார்க்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இதற்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.

#Nithya #Balaji #Poshika #Balajinithyacase #Balajinithyalatestnews #Tamilcinemaking