AD

படுக்கைக்கு அழைத்ததாலேயே சினிமாவில் இருந்து விலகினேன்


தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் நடிகர்கள், இயக்குனர்கள் மீது அண்மையில் பரவலாக பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை ரிச்சா பத்ராவும் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக தகவல் வெளியாகின. 

இவர் திரையுலகிற்கு 2002 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்தார். அதிக படங்களில் நடித்துக் கொண்டு இருந்தபோதே திடீரென சினிமாவை விட்டு விலகினார். அதன் பிறகு திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார்.  

திடீரென சினிமா வாழ்க்கையில் இருந்து அவர் காணாமல் போனது பற்றி கேட்கும் போது அவர் தெரிவித்தது ஆவது “என் சினிமா வாழ்க்கை மிக மோசமாக இருந்தது. நடிக்க வாய்ப்பு கேட்கும் போதெல்லாம் படுக்கைக்கு அழைத்தனர். இதனால்தான் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டேன். திருமணம் செய்துகொண்ட பிறகு மீண்டும் நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. எனவே மீண்டும் நடிப்பதற்கான வாய்ப்பை தேடிய போது 

அப்போதும் என்னை படுக்கைக்கு வரும்படி கட்டாயப்படுத்தினர். இதனால் சினிமா துறையே வேண்டாம் என்று முடிவு கட்டி இப்போது முழுமையாக ஒதுங்கி விட்டேன்.” என கூறியிருந்தார்.

#MeToo #RichaBhadra #Tamilcinemaking