AD

10 வருட காதலுக்கு பிறகு காதலியை கரம் பிடித்த வாணி ராணி புகழ் மானஸ்..!!!

`வாணி ராணி' சீரியலில் வில்லனாக நடித்து அனைவரையும் ஈர்த்தவர் மானஸ் சாவலி. சின்னத்திரையில் இவருடைய கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்அரண்மனைக்கிளி என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இவருக்குக் கடந்த திங்கள் கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. மானஸ் சாவலி தன்னுடைய காதலித்த நீரஜாவையே திருமணம் செய்திருக்கிறார். இது குறித்து நீரஜா கூறியிருப்பது:-

``எங்களுடைய பத்து வருடக் காதல் கனவு இப்போ நிறைவேறியிருக்கு. ரெண்டு பேரும் பயங்கர சந்தோசத்தில்  இருக்கோம். நிஜமாகவே எங்களுக்கு  கல்யாணம் ஆகிடுச்சான்னு ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் கேட்டுக்கிறோம். எங்களுடைய பெற்றோர்களுக்கு எங்க காதலை எடுத்துச் சொல்லி பெரியவங்க சம்மதத்தோடும் ஆசீர்வாதத்தோடும் எங்களுடைய திருமணம் நடைபெற்றது. மானஸ் ரொம்பவே நல்லவர். அவர் என் வாழ்ககையிலே  கிடைச்சது என் பாக்கியம். கிட்டத்தட்ட பத்து வருஷமா காதலிக்கும் போது எப்படி இருந்தோமோ..!!! அதே மாதிரிதான் "இனியும் இருப்போம்'' என்கிறார் நீரஜா.

 #ManasChawali #Niraja #Television #Serial #Vanirani #Marriage #Tamilcinemaking