AD

தோற்றம் மாறும் டாப்சி!





டாப்சி வழக்கமான கதாபாத்திரங்களிலிருந்து விலகி மாறுபட்ட வேடங்கள் ஏற்று நடித்து வருகிறார். குறிப்பாக அமிதாப்பச்சனுடன் ‘பிங்க்’ இந்தி படத்தில் மாறுபட்ட வேடம் ஏற்றிருந்தார். இப்படம் தற்போது தமிழில் நேர்கொண்ட பார்வை பெயரில் ரீமேக் ஆகிறது. அஜித் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்நிலையில் 60 வயது கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் டாப்சி. உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் சந்த்ரோ டோமர், பிரகாஷி டோமர். இருவருக்குமே 80 வயதுக்கு மேல் ஆகிறது. இருவரும் ரிவால்வர் துப்பாக்கியால் எந்த இலக்கையும் குறிதவறாமல் சுடுவதில் கில்லாடிகள். இவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘சாந்த் கி ஆங்க்’ பெயரில் திரைப்படம் உருவாகிறது.

இதில் பிரகாஷி டோமர் கதாபாத்திரத்தில் பூமி பெடுன்கர் நடிக்கிறார். சந்த்ரோ டோமர் கதாபாத்திரத்தில் டாப்சி நடிக்கிறார். நடிகைகள் இருவருக்குமே 30 வயதுதான் ஆகிறது. ஆனால் 60 வயது கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதுபற்றி டாப்சி கூறும்போது,’60 வயது பெண்ணாக சந்த்ரோ டோமர் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். நான் இதுவரை நடித்த வேடங்களிலேயே இது மிகவும் சவாலானது.

கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தகுந்த பயிற்சி தேவைப்பட்டதால் சந்த்ரோ டோரை நேரில் சந்தித்து பயிற்சி பெற்றேன் என்றார். 

#TamilCinemaKing #Cinema #Flim