திருமணம் இதற்குத் தடையில்லை
திருமணம் நடிகைகளின் கலைப்பயணத்திற்கு ஒரு தடைக்கல்லாகவே இருந்து வந்தது. இது கடந்த சில ஆண்டுகள் மட்டுமே.
ஆனால் தற்போதைய ஜோதிகா, சமந்தா உள்ளிட்ட நடிகைகள் இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்.
இதுகுறித்து நடிகர் ஜெய்யை காதலிப்பதாக கூறப்பட்ட அஞ்சலி கருத்து வெளியிட்டுள்ளார்.
என்னை சினிமாவிலிருந்து வெளியேற்றி விடவேண்டும் என்று நீண்ட காலமாக முயற்சிகள் நடக்கிறது. நான் காதலிப்பது போலவும், கல்யாணம் செய்து கொள்வது போலவும் பரபரப்பு செய்திகளையும் வெளியிட்டு வருகிறார்கள்.
நான் யாரையும் காதலிக்கவில்லை. சினிமாவைத்தான் காதலிக்கிறேன். நடிகைகள் காதலிப்பது, கல்யாணம் செய்து கொள்வது தவறே இல்லை.
என்னைப் பொறுத்தவரை திருமணம் செய்து கொண்டாலும் தொடர்ந்து நடிப்பேன். திருமணம் எனது சினிமாப் பயணத்திற்கு தடைக்கல்லாக அமையாத வகையில் பார்த்துக்கொள்வேன்-என்றார்.
#Anjali,#Samantha, #Jyothika, #Jai, #tamilcinemaking
Post a Comment