AD

கைதியான நடிகர் கார்திக்


நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ‘தேவ்’. இந்தப் படம் கார்த்திக்கு தோல்வியை தந்தது. இதனையடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகிய இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர். 

படத்தின் கதை ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி வருகிறதாகவும், கார்த்திக்கு ஜோடி கிடையாது எனவும் செய்திகள் கசிகின்றன. ஒரே ஷெட்யூலில் இந்தப் படத்தை முடிக்கத் திட்டமிட்டு, அதன்படி படமாக்கி வருகின்றனர். இம்மாத நடுப்பகுதியில் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் நிறைவடையும் எனத் தெரிகிறது. 

எனவே, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட முடிவு செய்துள்ளனர். நாளை (புதன்கிழமை) ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்துக்கு ‘கைதி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி, பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிய வருகிறது. அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா நடிக்கவுள்ளார்.