AD

பப்ளிசிட்டி தேடும் நடிகை டாப்ஸி!!

நடிகை டாப்ஸி தமிழில் அறிமுகமாகி படவாய்ப்பு இல்லாததால் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். அங்கும் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காத நிலையில் இந்தியில் நடிக்கச் சென்றார்.  வரவேற்பு குறைவாக இருந்தாலும் அமிதாப்பச்சன் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாலிவுட்டிலும் தொடக்கத்தில் எந்த விஷயத்திலும் தலையிடாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தார். ஆனால் கடந்த ஆண்டு திடீரென்று எதிர்மறை கருத்துக்கள் தெரிவிப்பதில் ஆர்வம் காட்டினார்.

அது ஒர்க் அவுட் ஆனதால் தொடர்ந்து அந்த பாணியை பின்பற்றத் தொடங்கினார். இணைய தள பக்கத்தில் தன்னை விமர்சித்த ரசிகர்களை கண்டுகொள்ளாமலிருந்த டாப்ஸி, திடீரென்று அவர்களை சகட்டு மேனிக்கு திட்டத் தொடங்கினார். கவர்ச்சி படங்கள் வெளியிட்டார். இயக்குனர் மீது மீடூ புகார் தெரிவித்ததுடன், தன்னுடை கருத்துக்களை பகிர்ந்தார். செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசினார்.
இது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. திடீரென்று நீங்கள் வெளிப்படையாக கருத்து சொல்லத் தொடங்கியது ஏன் என்று அவரிடம் கேட்டபோது, ‘அமைதியாக இருந்தவரை என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை இப்போது என்னைப்பற்றியே பேசுகிறார்கள். இது எனக்கு பிடித்திருக்கிறது. எப்படியோ என்னை டிரெண்டிலேயே வைத்திருக்கிறேன் அல்லவா?’ என்று தனது பப்ளிசிட்டி ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.