AD

ராதாரவிக்கு ஆலோசனை கூறிய சமந்தா!!

நடிகை நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி பேசிய  கருத்து நேற்று திரையுலகினர்களை மட்டுமின்றி அரசியல் உலகிலும் சர்ச்சைக்யை  ஏற்படுத்தியது. இந்த நிலையில் ராதாரவிக்கு நடிகர் சங்கமும், ஒட்டுமொத்த திரையுலகமும் கண்டனம் தெரிவித்து வருகின்ற இந்த நிலையில்.

நடிகை சமந்தா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ராதாரவிக்கு கிண்டலுடன் கூடிய ஒரு ஆலோசனை  கூறியுள்ளார். அவர் தான் செய்தது சரி என நிரூபிக்க போராடுவதாகவும், அவரை பார்த்தால் தனக்கு பாவமாக இருப்பதாகவும் கூறிய நடிகை சமந்தா, அவருடைய ஆன்மா அமைதியை தேட விரும்புவதாகவும், அந்த அமைதி நயன்தாராவின் சூப்பர் ஹிட் படத்தை பார்த்தால் கிடைக்கும் என்றும், அதற்காக  டிக்கெட் தான் அனுப்புவதாகவும் கூறியுள்ளார்.

மன அமைதிக்காக பாப்கார்னோடு மாத்திரையையும் சேர்த்து சாப்பிட்டால் ராதாரவிக்கு குணமாகிவிடும் என்றும் சமந்தா கிண்டலுடன் கூடிய ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார். நடிகை சமந்தாவின் இந்த கருத்துக்கு பெரும்பாலான நெட்டிசன்கள் ஆதரவு அளித்து வருகின்றார்கள்.