AD

மீண்டும் வைரமுத்துவை வம்புக்கு இழுத்து பாடகி!!

கவிபேரரசு வைரமுத்து மீது பாடகி சின்மயி கடந்த சில மாதங்களுக்கு முன் மீடூ குற்றச்சாட்டை கூறி இருந்தார்.  அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது  என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்திருந்த போதிலும் இந்த பிரச்சனை மீடியாவில் பெரும் பரபரப்பை சில மாதங்களாக ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் பாடகி சின்மயி தற்போது மீடூ குறித்து பாடலாசிரியர் பா.விஜய் எழுதிய இரண்டு வரிகளை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். "சின்னதாய் ஒரு புன்னகை சினேகமாய் பூக்க போய்  2 ஜென்மம் முன்னால் என்னை அணைத்தார் என்று மீடூ-வில் சொன்னாலும் சொல்வார்கள்".

இந்த பாடல் வரிகளை பதிவு செய்த சின்மயிக்கு டுவிட்டர் பயனாளி ஒருவர் 'இன்னும் அந்த பாஸ்போர்ட் கிடைக்கலையா? என்று கேள்வி எழுப்ப அதற்கு கடுப்பாகிய  சின்மயி, 'அதென்னடா வைரமுத்து ஐயா அவர்களை சப்போர்ட் பன்ற அத்தனை கூமுட்டைகளுக்கும் இதே கேள்விதான் வருது? 4 மாசத்துல கேள்வியை மாத்தல? அவ்ளோ அறிவு எங்கே இருக்க போகுது? என்று சர்ச்சைக்குரிய ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார்.

#Chinmayi #vairamuthu #singer #Pa.Vijay #meto #issue