ரூபா 1 லட்சம் கொடுத்துவிட்டு பாலியல் தொல்லை
கன்னட சினிமாவில் டாப் நடிகையாக இருந்தவர் விஜயலக்ஷமி. பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் தமிழில் விஜய்-சூர்யாவுடன் இணைந்து ப்ரண்ட்ஸ் என்ற படத்தில் நடித்தார். அவர் உடல் நலக்குறைவு உயர் ரத்த அழுத்தம் காரணமாக பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற பணம் இல்லாமல் திரையுலகினரிடம் உதவி கேட்டார்.
விஜயலட்சுமிக்கு கன்னட நடிகர் ரவி பிரகாஷ் ரூ. 1 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார். இதையடுத்து அவர் தினமும் மருத்துவமனைக்கு வந்ததுடன், அடிக்கடி மெசேஜ் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்று விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்துள்ளார்.
ரவி பிரகாஷின் தொல்லையை தாங்க முடியாமல் விஜயலட்சுமி வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால் அவரின் இந்த பாலியல் புகாரை ரவி பிரகாஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
விஜயலட்சுமி எதற்காக போலீசாரை அழைத்தார் என்று தெரியவில்லை. நான் சனிக்கிழமை போலீஸ் அதிகாரி ஒருவரை சந்தித்து நடந்தது குறித்து விளக்கம் அளித்தேன். நான் விஜயலட்சுமியிடம் பேசவே
இல்லை என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. என் செல்போனை பார்த்தாலே தெரிந்துவிடும் என்கிறார் ரவி பிரகாஷ்.
#vijayalakshmi #Ravipirakash #Tamilcinemaking
Post a Comment