AD

கைதிக்கு வந்த சோதனை

தமிழ் சினிமாவில் தற்போது தலைப்புக்களுக்குப் பஞ்சம் அதிகாரித்துள்ளது.

எப்படி தலைப்பு வைப்பது, ரசிகர்களைக் கவரக் கூடிய தலைப்பு எவ்வாறு வைப்பது என்றெல்லாம்  இயக்குனர்கள் குழம்பிப் போயுள்ளனர். 

ஜிஎஸ்டி வந்த பின்னர்  தமிழ்த் தலைப்பு வைத்தால்தான் வரிவிலக்கு என்பதும் இல்லாமல் போய்விட்டதால் ஆங்கிலத் தலைப்புகள் தாராளமாக வர ஆரம்பித்துள்ளன.

'மாநகரம்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படத்திற்கு 'கைதி' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பெயரில் ஏற்கெனவே வீணை எஸ் பாலசந்தர் இயக்கம் நடிப்பில் 1951 ஆம் ஆண்டு ஒரு படம் வெளிவந்துள்ளது. 

சிரஞ்சீவி நாயகனாக நடித்து தெலுங்கில் 'கைதி' என்ற பெயரில் உருவான படம் 1983 ஆம் ஆண்டு தமிழிலும் டப்பிங் ஆகி அதே பெயரில் வெளிவந்தது. 

தமிழில் 100 நாட்களைக் கடந்து ஓடி வெற்றிப் படமாக அமைந்தது இந்தப் படம். 
சிரஞ்சீவிக்கு தெலுங்கில் ஒரு ஸ்டார் அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்த படம் இது. இப்போது அதே பெயரைக் கார்த்தி நடிக்கும் புதிய படத்திற்கும் வைத்துள்ளனர்.