திருமாவளவனை வாழ்த்திய இயக்குநர்
இந்தியாவின் மக்களவை தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.
ஏப்ரல் 18 ஆம் திகதி மக்களவை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், சிதம்பரம் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பானை சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில், கட்சியின் பொதுச்செயலர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் தேர்தலில் போட்டியிடும் திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
#Tamilcinemaking, #Thirumavalavan, #Pa_Ranjith
Post a Comment