குடிமகன் சொன்ன கதை
குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்க, குடும்பத்தில் உள்ளவர்களின் உறக்கம் போய்விடுகிறது என்னும் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் திரைப்படம் “குடிமகன்”
பிரசாந்த் இசையமைக்க, கதை, திரைக்கதை, வசனம், இயக்கி, தயாரித்து இருக்கிறார் சத்தீஷ்வரன்.
விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட ஒரு அழகான கிராமத்தில் மதுபானக் கடையைக் கொண்டு வந்து பேரதிர்ச்சியைத் தருகிறார் அந்த ஊர் கவுன்சிலர்.
ஊரில் உள்ள ஆண்கள் பெரும்பாலனபேர் குடிக்கு அடிமையாக அதில் ஹீரோவும் சேர்கிறான்.
இதனால் அவன் மனைவி, மகன் பல கஷ்டங்களை சந்திக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல், யாருமே எதிர்பார்க்காத காரியத்தைச் செய்து கிராமத்தையே அதிர வைக்கிறாள் ஹீரோயின்.
அந்த முடிவு என்ன என்பதை எதார்த்தமாக சொல்லும் படம் குடிமகன்.
ஜெய்குமார், ஜெனிபர், மாஸ்டர் ஆகாஷ், பாலாசிங் கிருஷ்ணமூர்த்தி வீரசமர், கிரண், பாவா லெட்சுமணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
#Kudimagan, #tamilcinemaking
Post a Comment