AD

புலிகளை தத்தெடுத்த விஜய்சேதுபதி !

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் பல சமூக அக்கறை கொண்ட செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்.சமீபத்தில் இவருக்கு கலைமாமணி விருது அறிவித்து தமிழக அரசு மரியாதை செய்தது.

தற்போது இவர் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள இரண்டு வெள்ளை புலிகளை தத்தெடுத்துள்ளார்.அதோடு இரண்டு புலிகளின் செலவுக்காக முதற்கட்டமாக 5 லட்ச ருபாய் வழங்கியுள்ளார். இவரின் இந்த செயலை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.