யார் பற்றியும் கவலைப்படாமல் தன் இஷ்டத்துக்கே செய்பவர்
யாரைப் பற்றியும் கலைப்படாமல் தனக்கு தோன்றியதை மட்டுமே செய்யக்கூடியவர் சிம்பு. எப்போது எப்படி நடந்து கொள்வார்? எப்போது என்ன செய்வார் என்பதையும் ஊகிக்க முடியாது. அப்படி ஒரு வேலையைத் தான் சமீபத்தில் சிம்பு செய்திருக்கிறார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் அவரை ஹீரோவாக வைத்து மாநாடு என்ற படத்தை தயாரித்து வருகிறார் சுரேஷ் காமாட்சி என்ற தயாரிப்பாளர்.
கடந்த வருடமே ஆரம்பிக்கப்பட இருப்பதாக சொல்லப்பட்ட இப் படத்துக்கு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்த சிம்பு, திடீரென சுந்தர்.சி இயக்கிய வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடிக்கப்போனார்.
பின்னர் மாநாடு படத்துக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை. உடம்பைக் குறைக்கப் போவதாக சொல்லிவிட்டு லண்டன் போய்விட்டார். அங்கிருந்தபடியே ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் நடிக்கப்போகிறார்.
அந்தப் படத்தை முடித்த பிறகு ஆர்யா நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் நடிக்க 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் சிம்பு.
#simpu #maha #mahanewupdate #tamilcinemaking
Post a Comment