AD

செல்பி பிரச்சனை குறித்து கஸ்தூரி விளக்கம்!!

#Kashuri #Sivakumar #Karthti #Julai kaatru #Suriya

ஜூலை காற்றில்' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் கலந்து கொண்டார். அப்போது இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கஸ்தூரி, கார்த்தியை அழைத்து கார்த்தியின் சம்மதம் கேட்காமலேயே செல்பி எடுத்தார். இதுகுறித்து மேடையிலேயே கார்த்தி தனது அதிருப்தியை தெரிவித்தார்.


இதுகுறித்த வீடியோ இணையதளங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் கஸ்தூரிக்கு கண்டனங்கள் குவிந்தது. இந்த நிலையில் இதுகுறித்து கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, '"ஜூலை காற்றில்" படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏதாவது வைரல் விஷயம் வேண்டும் என்று செய்தது ஒர்க் அவுட் ஆயிருச்சு. இதை நம்பி  கொந்தளிக்கிற எமோஷனல் நபர்கள் கண்டிப்பாக ஜூலை காற்றில்படத்தை என்ஜாய்  பண்ணுவீங்க' என்று கூறினார்.