AD

யாருக்கும் விட்டுத்தர மாட்டேன்


இரும்புத்திரை பி.எஸ்.மித்ரன் சிவகார்த்திகேயன் நடிப்பில்  இயக்கும் படத்திற்கு ஹீரோ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

அறிமுக இயக்குனர் ஆனந்த் அண்ணாமலை, ஹீரோ தலைப்பு என்னிடம் உள்ளது. அதனை யாருக்கும் விட்டுத்தர மாட்டேன் என்று கூறியதுடன் அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளார். 

அடிப்படையில் நான் எழுத்தாளர். பல நாவல்களை எழுதியிருக்கிறேன். நான் எனது கதை ஒன்றை படமாக்க இருக்கிறேன். அந்த கதைக்கு ஹீரோ என்று டைட்டில் வைத்து, அதனை தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு வருடத்திற்கு முன்பே பதிவு செய்திருக்கிறேன். எனது படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். நேரடி தமிழ் படமாக உருவாகும் ஹீரோ அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகும்.

படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 22 ஆம் திகதி புதுடில்லியில் தொடங்குகிறது.. கதாநாயகியாக பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகனன் நடிக்கிறார். 

இந்த நிலையில் இன்னொரு படத்திற்கு ஹீரோ என்று டைட்டில் வைத்திருப்பதாக நேற்று தகவல் வெளியானது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.  தலைப்பை யாருக்காகவும் விட்டுத்த தரமாட்டேன். 

இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிடுவேன். என்றார்.



#Vijay_Devarakonda, |#Hero,#Malavika, #PSMithran, #Sivakarthigeyan, #Anand_Annamalai