AD

கணவனின் முத்தம் விளக்குகிறார் சமந்தா

தென்னிந்திய சினிமாக்களிலும் சமீபகாலமாக முத்தக் காட்சிகள் சர்வ சாதாரணமாகி விட்டது. 

தெலுங்கில் 'டியர் காம்ரேட்' டீசரில் விஜய் தேவரகொண்டா, ராஷிகா இருவரும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த  விவகார சர்ச்சை அடங்குவதற்குள் அடுத்து 'மஜ்லி' படத்தில் நாகசைதன்யா, திவ்யன்ஷா கவுசிக் ஆகியோரின்  உதடு முத்தக் காட்சி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

'ரங்கஸ்தலம்' படத்தில் சமந்தா, ராம் சரண் இப்படி ஒரு முத்தக் காட்சியில் நடித்தனர். இதன்போது,  திருமணமான பெண் எப்படி, இப்படி நடிக்கலாம் என்ற கமெண்ட்டுகள் வந்தன. 

திருமணமான பெண் அப்படி நடிக்கக் கூடாது என்றால், இப்போது திருமணமான ஒரு ஆண் எப்படி, இப்படி நடிக்கலாம் என நாகசைதன்யா பற்றி சிலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இது குறித்து சமந்தா கூறுகையில், “சினிமாவில் முத்தம் கொடுப்பதோ, கட்டிப் பிடித்து நடிப்பதோ எல்லாமே ஒரு நடிப்புதான். நானும் எனது கணவர் நாகசைதன்யாவும் நல்ல நட்பில், அன்பில் இருக்கிறோம். சினிமாவில் எங்களது விருப்பப்படி நடிக்கிறோம், என்று தெரிவித்துள்ளார்.


#Samantha, #naga_chaitanya, #Majili, #tamilcinema