AD

நடிகை வித்யா பாலனின் கோபம்!!

நடிகை வித்யாபாலன் கொஞ்சம் வித்தியாசமானவராக உள்ளார், ஏன் என்றால்  உடல் எடை கூடியிருந்தாலும் அதுபற்றி கண்டுகொள்ளாமல் படங்களில் நடிக்கிறார். ஆனால் யாராவது அவரிடம் சென்று குண்டாக இருக்கிறீர்களே, எப்போது உடல்மெலிய போகிறீர்கள் என்று கேட்டால் உடனே கோபத்தின் உச்சிக்கு சென்றுவிடுகிறார். ‘உனக்கு என்ன தெரியும் மூடிகிட்டு போயா’ என அடிக்காத குறையாக விரட்டுகிறார். உடல்பருமன் பற்றி கேட்டால் கோபப்படுவது ஏன் என்று வித்யாபாலனிடம் கேட்டதற்கு பதில் அளித்தார்.

நான் எல்லோரையும் நேசிக்கிறேன், நடிப்பை நான்  தேர்வுசெய்தேன், எனக்கென்று ஒரு கொள்கை  வைத்திருக்கிறேன். அதன்படியே எதையும் ஏற்று கொள்கிறேன். எனது உடல்பருமன் பற்றி கேட்பவர்களுக்கு என்னைப்பற்றி என்ன தெரியும். நானும் சாதாரண பெண்தான்.  எனக்கும் ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது.

எனவே எனது உடல் எடையை குறைப்பது எளிதான காரியம் அல்ல. எனக்கும் அது எரிச்சலாகத்தான் இருக்கிறது. நான் குண்டாக இருக்க விரும்பவில்லை. ஆனால் எனது உடல்வாகு அப்படியிருக்கும் போது என்ன செய்வது? உடல் எடை குறைக்க நான் பல்வேறு வழிகளில் முயற்சிக்கிறேன். ஆனால் நான் கவலைப்படாமலிருப்பதாக பலர் நினைக்கிறார்கள்.

அதனால்தான் எனக்கு கோபம் வருகிறது. நான் பொது இடங்களுக்கு வருவதை விரும்பவில்லை. அப்படி வந்தால் சிரித்து சிரித்து சமாளிக்க வேண்டியதிருக்கும் என்று வித்யா பாலன் கூறினார். "தி டர்ட்டி பிக்சர்" உள்ளிட்ட பல்வேறு இந்தி படங்களில் நடித்துள்ளார்.  இவர் முதன்முறையாக தமிழில் அஜீத்துடன்  இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.