AD

இந்தியாவின் பெருமைமிகுந்த ஹீரோக்கள் இவர்கள் - அவர்களுக்கு எனது சல்யூட் - நடிகர் கமல்ஹாசன்!!!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை இந்திய விமானப்படையினர் 2000 பேர் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து 12 இடங்களில் இருந்த தீவிரவாதிகளின் முகாம்களில் துல்லியமாக தாக்குதல் நடத்தி ஓரு உயிரிழப்பு கூட இல்லாமல் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். இந்த தாக்குதலில் புல்வாமா தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்பின் தலைமையிடம் உள்பட அனைத்து முகாம்களும் அழிக்கப்பட்டன

அந்த வகையில் இந்திய ராணுவத்தின் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள நடிகர் கமல்ஹாசன் இந்த தாக்குதல் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களை அழித்துவிட்டு பத்திரமாக நாடு திரும்பிய அனைத்து வீரர்களையும் பாராட்டுகின்றேன். இந்தியாவின் பெருமைமிகுந்த ஹீரோக்கள் இவர்கள்.
அவர்களுக்கு எனது சல்யூட் என்று தெரிவித்துள்ளார்.