AD

காஷ்மீரின் தாக்குதலுக்கு ரஜினிகாந்த் கடும் கண்டனம்!!

காஷ்மீரில் மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் மீது, தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு நாடும் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ள வண்ணம் உள்ளது.

இந்நிலையில், புல்வாமா தாக்குதல் சம்பவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புல்வாமாவில் நடந்த மன்னிக்க முடியாத தீவிரவாத தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன். "காட்டுமிராண்டித்தனமான" இந்த  செயலுக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது.

தாக்குதலில் உயிர் நீத்த, படுகாயம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்கள். மரைந்த வீரர்களின் ஆத்மா சந்தியடையட்டும் என தெரிவித்துள்ளார்.