AD

அப்பா இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம் - கார்த்தி!!


ஒரு இளைஞர் கடந்த சில மாதங்களுக்கு முன் செல்பி எடுக்க முயன்றபோது நடிகர் சிவகுமார் அவருடைய செல்போனை தட்டிவிட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதனையடுத்து இந்த நிகழ்வுக்காக மன்னிப்பு கேட்ட
சிவகுமார், அந்த இளைஞருக்கு புது செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் சிவகுமார் கலந்து கொள்ள சென்றபோதும் செல்பி வீடியோ எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டார். இதுகுறித்து நடிகர் கார்த்தி பேட்டி ஒன்றில் கூறியபோது, 'கையில் போன் இருந்தால் யாருடைய முகத்தின் முன் போனை நீட்டி செல்பி எடுப்பது என்பது அநாகரீகமானது. "செல்பியோ புகைப்படமோ" எடுப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட நபரிடம் அனுமதி கேட்டு எடுக்க வேண்டும் என்ற நாகரீகத்தை நாம் இன்னும் யாருக்கும் கற்றுத்தரவில்லை என்பது ஒரு சோகமான விஷயம்.

இதுவொரு சாதாரண விஷயம். இந்த விஷயத்திற்காக மீடூ அளவுக்கு விமர்சனம் செய்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் அப்பா இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம் என்பதையும் கார்த்தி  பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.