AD

''இந்தியாவின் ஜாக்கிசான்'' - ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பிரபலம்


பிறமொழிப் படங்கள்  தமிழில் வெளியாகும் போது சப் டைட்டிலுடன் வெளியாவது வழக்கம். மேலும் தமிழ் படங்கள் மற்ற மொழிகளில் வெளியாகும் போதும் சப் டைட்டிலுடன் வெளியாகும். சப் டைட்டிலே ஒரு படம் பிரபலமாவதற்கு காரணமாக அமைகின்றது.

 இந்த சப் டைட்டில் பணிகளை மேற்கொள்வதில் புகழ்பெற்றவராக விளங்குபவர் Rekhs. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய மகளின் திருமணத்தில் பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை
வெளியிட்டு இருந்தார். பிரபு, நா.முத்துக்குமார், இயக்குநர் பாலா, சிவக்குமார் ஆகியோருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

அப்போது விஜய்யுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர், ’7 வருடங்களுக்கு முன் எனது மகளின்  திருமணத்தில் நாம் இருவரும் சந்தித்தோம். எங்கள் இருவருக்குமான அன்பு ஷாங்காயில் உருவானதா அல்லது முன் ஜென்மத்திலா என தெரியவில்லை. விஜய் நன்றாக பேசினார். அப்போது சீனாவைச் சேர்ந்த ஒருவர் விஜய்யிடம் நீங்கள் இந்தியாவின் ஜாக்கி சான் என்றார். அந்த வார்த்தையை மறக்க முடியாது’.என்றார்.