AD

கண்ணடித்து வைரலானதாலேயே என்னை ஓரம் கட்டினார்கள்- அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகை


அண்மையில் இரண்டு வாரங்களுக்கு வெளிவந்தது ஒரு அடர் லவ் படம். பிரியா வாரியர் கண்ணடிக்கும் வீடியோ பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையிலும் படம் படுதோல்வியை தான் சந்தித்து இருந்தது.

இப் படம் 4 தென்னிந்திய மொழிகளில் ரிலீஸ் செய்தனர். அனைத்திலும் பிளாப் தான். இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள நூரின் ஷெரீஃப் புதிய குற்றச்சாட்டு ஒன்றினை முன் வைத்துள்ளார்.


நூரின் ஷெரீஃப் தான் முதலில் இந்த படத்தின் ஹீரோயினாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஷூட்டிங் நடத்தப்பட்டதாம். ஆனால் ப்ரியா வாரியர் கண்ணடித்து டீஸர் இந்தியா முழுவதும் வைரலாக போன நிலையில்,
அதை பார்த்து இயக்குனர் ஓமர் லுலு  படத்தின் மொத்த கதையையும் மாற்றிவிட்டார்.

"பிரியா வாரியாருக்கு முக்கியத்துவம் கொடுத்து என்னை ஓரங்கட்டிவிட்டார்கள்" என நூரின் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.