சூப்பர் ஸ்டார் ரஜினிகாதின் புதிய படம்!
படத்தின் முதற்கட்ட பணிகள் மும்புரமாக இருக்கும் நிலையில், நடிகர், நடிகைகள் தேர்வு தீவிரமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. அனைத்து பணிகளையும் பிப்ரவரியில் முடித்துவிட்டு மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
2.0 படத்தை தொடர்ந்து, ரஜினி நடிக்கும் இந்த படத்தையும் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் படத்தின் தலைப்பு குறித்து பரவிய வதந்திக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முற்றுப்புள்ளி வைத்தார். ஏ.ஆர்.முருகதாஸின் முந்தைய படங்களை போலவே இந்த படத்திலும் அரசியல் இருக்கும் என்றும் தகவல் கசிந்துள்ளது. ரஜினி இந்த படத்தில் போலீசாக நடிப்பதாகவும் முன்னதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அறிந்த சூப்பர் ஸ்டார் ராஜனிகாந்தின் ரசிகர் ஒருவர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தலைவன் 166 என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment